கம்பராமாயணம்..530 - a podcast by Jaya Ram
from 2023-10-08T05:04:56
கம்பராமாயணம்..
கும்பகருணன் வீடணனிடம் மறுத்துப் பேசுதல்.
காண்டம் - யுத்த காண்டம்.
படலம் - கும்பகருணன் வதைப் படலம்.
பாடல் எண் 530
நாள் - ஐந்நூற்று முப்பதாவது நாள்.
கருத்து இலா இறைவன் தீமை கருதினால் அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம்? தீராது ஆயின்
பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி
ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா.
விளக்கம் - மந்திரம் கேட்கும் சூழ்தல் இல்லாத தலைவன் தீத்தொழில் செய்ய எண்ணினால் அவன் அவ்வாறு செய்யாமல் தடுத்து திருத்துதல் கூடுமாயின் அன்றோ திருத்தலாம் அவ்வாறு திருத்த முடியாது போனால் அவனுக்கு எதிர் சென்று அடையத் தக்க பெரும் பொருள் உண்டோ? ஒருவனுடைய உணவை உண்டு வளர்ந்தவர் செய்ய உரிய செயல் அவனுக்காக போர் செய்யும் தொழிலுக்கு உரிமையுடையவர் ஆகி ஒப்பற்ற தலைவனுக்கு முன்னர்ச் சாதலே கேட்பாயாக.
கு. பாஸ்கர்.... அபுதாபி
Further episodes of பொதிகைச் சாரல்
Further podcasts by Jaya Ram
Website of Jaya Ram