கம்பராமாயணம் 566 - a podcast by Jaya Ram
from 2023-11-23T14:41:55
கம்பராமாயணம்...
அதிகாயன் அனுமனோடு பேசுதல்..
காண்டம் - யுத்த காண்டம்.
படலம் - அதிகாயன் வதைப் படலம்.
பாடல் எண் - 566
நாள் - ஐந்நூற்று அறுபத்தாறாவது நாள்.
இன்று அல்லது நெடுநாள் உனை ஒரு நாளினும் எதிரேன்
ஒன்று அல்லது செய்தாய் எமை இளையோனையும் உனையும்
வென்று அல்லது மீளாத என் மிடல் வெங் கணை மழையால்
கொன்று அல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன்..
விளக்கம் - உன்னை இன்றைக்குக் கொன்றால் அல்லது இனிவரும் நீண்ட காலத்தில் ஒரு நாள் கூட எதிர்த்துப் போரிட மாட்டேன், நீ எனக்கு பல தீங்குகளை செய்தாய் அதனால் வெற்றி பெற்று அன்றி வீணாக மீளுதல் இல்லாத என்னுடைய வலிமை பொருந்திய கொடிய அம்புகளின் மழையால் உன்னைக் கொல்லாமல் மீள மாட்டேன் இதை நீ மனதில் உறுதியாக கொள் என்றான்...
கு. பாஸ்கர்.... அபுதாபி
Further episodes of பொதிகைச் சாரல்
Further podcasts by Jaya Ram
Website of Jaya Ram