கம்பராமாயணம் 569 - a podcast by Jaya Ram

from 2023-11-23T14:49:09

:: ::

கம்பராமாயணம்..

இலக்குவன் அதிகாயனோடு போரிடல்...


காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - அதிகாயன் வதைப் படலம்.

பாடல் எண் - 569

நாள் - ஐந்நூற்று அறுபத்தொன்பதாவது நாள்.


நன்று என உவந்து வீரன் நான்முகன் படையை வாங்கி
மின் தனி திரண்டது என்னச் சரத்தொடும் கூட்டி விட்டான்
குன்றினும் உயர்ந்த தோளான் தலையினைக் கொண்டு அவ் வாளி
சென்றது விசும்பினூடு தேவரும் தெரியக் கண்டார்..


விளக்கம் - இலக்குவன் நன்று என்று மகிழ்ந்து சொல்லி நான்முகன் படைக் கலத்தை எடுத்து மின்னல் தனியே திரண்டு விட்டது என்று கூறும்படி அம்புடன் சேர்த்துச் செலுத்தினான் அந்த அம்பானது குன்றினும் உயர்ந்த தோள்களை உடைய அதிகாயனது தலையை அறுத்துக் கொண்டு ஆகாய வழியாகச் சென்றது அதனை தேவர்களும் தெளிவாகக் கண்டனர்..

கு. பாஸ்கர்..... அபுதாபி

Further episodes of பொதிகைச் சாரல்

Further podcasts by Jaya Ram

Website of Jaya Ram