கம்பராமாயணம் 573 - a podcast by Jaya Ram

from 2023-11-29T12:56:29

:: ::

கம்பராமாயணம்...

இந்திர சித்தன் வஞ்சினம்..


காண்டம் - யுத்த காண்டம்..

படலம் - நாகபாசப் படலம்.

பாடல் எண் 573

நாள் - ஐந்நூற்று எழுபத்து மூன்றாவது நாள்.


மருந்தே நிகர் எம்பிதன் ஆர் உயிர் வவ்வினானை
விருந்தே என அந்தகற்கு ஈகிலென் வில்லும் ஏந்தி
பொரும் தேவர் குழாம் நகைசெய்திடப் போந்து பாரின்
இருந்தேன் எனின் நான் அவ் இராவணி அல்லென் என்றான்.

விளக்கம் - சாவா மருந்தைப் போன்ற என் தம்பியாகிய அதிகாயன் தன் அரிய உயிரை கவர்ந்தவனாகிய இலக்குவனை யமனுக்கு விருந்து கொடுக்காமல் என்னுடன் போரிடும் பகைவர்களான தேவர்கூட்டம் எள்ளி நகை செய்திட வில்லையும் கையில் ஏந்தி நான் நிலத்தில் பொருந்தி இருந்தேன் என்றால் அந்த இராவணனுடைய மகன் அல்லேன் என்று கூறினான்..

கு. பாஸ்கர்... அபுதாபி

Further episodes of பொதிகைச் சாரல்

Further podcasts by Jaya Ram

Website of Jaya Ram