கம்பராமாயணம் 576 - a podcast by Jaya Ram

from 2023-11-29T13:04:55

:: ::

கம்பராமாயணம்..

நாகபாசத்தால் கட்டுண்டவர் நிலை.


காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - நாகபாசப் படலம்.

பாடல் எண் - 576

நாள் - ஐந்நூற்று எழுபத்தாறாவது நாள்.


ஆயிரம் கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு
போயின போதும் ஒன்றும் துடித்திலன் பொடித்து மானத்
தீ எரி சிதறும் செங் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான்..


விளக்கம் - மான உணர்வினால் தீப்பொறி சிதறுகின்ற சிவந்த கண்களை உடைய அஞ்சனை பெற்ற சிங்கம் போன்றவனாகிய அனுமன் ஆயிரம் கோடி அம்புகள் தன் மார்பினுள் ஊடுருவிய போதிலும் ஒரு சிறிதும் வருத்தம் அடையவில்லை ஆனால் இலக்குவனுக்கு நேர்ந்த துன்பம் தன் நெஞசைச் சுட மன நடுக்கம் கொண்டான்...

கு. பாஸ்கர்... அபுதாபி

Further episodes of பொதிகைச் சாரல்

Further podcasts by Jaya Ram

Website of Jaya Ram